சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் அருகே செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோவை மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவரது மகன் அருண் (16). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள அருண், தொடர்ந்து செல்போனில் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவை சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக அருண் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.