×

சத்தியமங்கலம் அருகே செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனநலம் பாதித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் அருகே செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோவை மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவரது மகன் அருண் (16). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள அருண், தொடர்ந்து செல்போனில் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவை சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக அருண் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

இதைத்தொடர்ந்து புஞ்சை புளியம்பட்டி அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்துப் பண்ணை வீட்டில் கந்தவேல் கடந்த 3 மாதங்களாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு அருண் தனியாக உள்ள அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : suicide ,Satyamangalam , Satyamangalam, cell phone, mental health, boy, hanging, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை