கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பினை ருசித்தன

கூடலூர்: கூடலூர் அருகே காட்டு யானைகள் பழங்குடியினரின் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியதோடு வீட்டிலிருந்த அரிசி, பருப்பினை சாப்பிட்டு சென்றன. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள புலியம்பாறை பகுதியில் உள்ளது கோழிக்கொல்லி ஆதிவாசி குடியிருப்பு. கடந்த 24ம் தேதி இரவு குடியிருப்புக்குள் நுழைந்த 5 காட்டு யானைகள் கோத்தன், சங்கரன், குஞ்சன் ஆகியோரது வீடுகளை சூழ்ந்தன.இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது காட்டு யானைகள் சுற்றி வளைத்து வீட்டை உடைத்து சேதப்படுத்தின.

யானைகள் வீட்டை முன்புறம் உடைத்தபோது வீட்டில் இருந்தவர்கள் பின்புறமாக வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். வீட்டின் சுவர்களை உடைத்து முழுவதுமாக சேதப்படுத்திய காட்டு யானைகள், வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடியதோடு, அரிசி,பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சென்றன. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: