சென்னை: மனுதர்மம் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வைரமுத்து கவிதை வெளியிட்டுள்ளார். திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே அரிமா போல் ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே. அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே, நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே என கூறியுள்ளார்.