கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதா? அமைச்சர் கண்டனம்

நாகை: நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இதைவிட வேறு என்ன செய்ய முடியும்.நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு. தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 2 கண் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும். ஆனால் முத்தரசனின் 2கண்களுக்கு 2 பார்வைகள் உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

Related Stories: