பெங்களூரு: மைசூர் தசரா விழாவில் யானைகள் ஊர்வலம் மிக எளிமையாக நடந்தது. கர்நாடகாவில் உலகப் புகழ்பெற்ற தசரா விழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு கலை நிகழ்ச்சிகள் உள்பட பல முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், நவராத்திரியின் 9 நாட்கள் நடக்க வேண்டிய விழாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் நடந்தது. முதல்வர் எடியூரப்பா யானைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் 45 நிமிடம் மட்டுமே நடந்தது.