குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை: கஞ்சா, மதுபான விற்பனை செய்த 38 பேர் ஒரே நாளில் கைது: கார், பைக்குகள், மதுபான பாட்டில், கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, மதுபான விற்பனையில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதுபானம், கஞ்சா விற்பனை போன்றவையும் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்தினர். குலசேகரம் பகுதியில் திருநந்திக்கரை பகுதியில் சசி மனைவி சந்திரி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆரல்வாய்மொழி பகுதியில் வினிஷ்பாபு தலைமையில் சோதனை நடத்திய போலீசார் அருள்ராஜ்(34) என்பவரை கைது செய்து 14 பாட்டில் மதுபானத்தை கைப்பற்றினர்.

திருவட்டாரில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சாதுபுஷ்பராஜ்(57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 பாட்டில் மதுபானத்தை போலீசார் கைப்பற்றினர். இதனை போன்று தக்கலையில் மூலச்சலில் ஜோஸ்(46) என்பவரிடம் இருந்து 3 பாட்டில் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தக்கலை, இரணியல் ரோடு பகுதியில் முருகன்(42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1026 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.  சுசீந்திரம் போலீசார் அக்கரை பாலம் பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட விஷ்ணு(47), செந்தில் (43) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பாட்டில் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.

கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட தங்கராஜ்(82) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பாட்டில் மதுபானத்தை கைப்பற்றினர். கன்னியாகுமரி போலீசார் பெருமாள்புரம் இசக்கி அம்மன் கோயில் முன் பகுதியில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட முருகன்(48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 பாட்டில் மதுபானத்தை கைப்பற்றினர்.  வடசேரி போலீசார் பஸ் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த முகம்மது அசா(53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 பாக்கெட் பொருட்களை கைப்பற்றினர். வடசேரி பகுதியில் ஜஹாங்கீர்கான் (47) என்பவரும் 32 பாக்கெட் புகையிலை பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

ராஜாக்கமங்கலம் போலீசார் நடத்திய சோதனையில் தம்மத்துக்கோணத்தில் 6 பாட்டில் மதுபானத்துடன் சிவன்(49) என்பவரை கைது செய்தனர். மேலும் தம்மத்துக்கோணம் பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட ரவி(63) என்பவரையும் போலீசார் கைது செய்தனர், 6 பாட்டில் மதுபானம் கைப்பற்றப்பட்டது. குளச்சல் பகுதியில் நாகராஜன்(37) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 23 பொட்டலங்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை கைப்பற்றி அவரை கைது செய்தனர். களியக்காவிளையில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்த சுகுமாரன்(74) என்பவரை கைது செய்தனர். தென்தாமரைக்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஐயாதுரை(67) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் பகுதியில் சுனில்(34) என்பவர் மதுபானம் பதுக்கி விற்ற நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 பாட்டில் மதுபானம் கைப்பற்றப்பட்டது. ராஜாக்கமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட்டக்கரை பாலம் பகுதியை சேர்ந்த பிரஜின்பிரகாஷ்(21) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதனை போன்று சரக்கல்விளையை சேர்ந்த விஷ்ணு(19) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றையும் கைப்பற்றினர். தென்பால்கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகாயடேவிட்(24) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

மணவாளக்குறிச்சி பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட காளியப்பன்(65) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 பாட்டில் மதுபானம் கைப்பற்றப்பட்டது.

கொல்லங்கோடு பகுதியில் ராதாகிருஷ்ணன்(60) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இரணியல் போலீசார் நடத்திய சோதனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட கண்டன்விளையை சேர்ந்த ராஜ்(37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாட்டில் மதுபானம் கைப்பற்றப்பட்டது. குசவன்குழியை சேர்ந்த அஜித்(29) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 பாட்டில் மதுபானமும், மணக்கரை சேயர்ந்த யூஜின்(37) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 பாட்டிலும், ஆன்றோ(43) என்பவரிடம் இருந்து 8 பாட்டிலும் கைப்பற்றப்பட்டது. மேலும் புகையிலை பொருட்களை விற்ற இரணியல் கோணத்தை சேர்ந்த மரிய அருள்(58) நெய்யூர் ராஜகுமார் (50), ஜெபராஜ்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மதுபான விற்பனையில் ஈடுப்டட வில்லுக்குறி சுதாகர் (45) கைது செய்யப்பட்டார்.

இதனை போன்று கொல்லங்கோடு போலீசார் வேணுகுமார்(45) என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி கைது செய்தனர். புதுக்கடையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பன்னீர்செல்வம்(72), நித்திரவிளையில் விஜேஷ்(32), கருங்கலில் சுந்தர்ராஜ்(62), பாயிலோ (60) ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் கடையாலுமூடு போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஷ்ணு(30) என்பவடரை கைது செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா, கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மார்த்தாண்டம் பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட மணி(58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பாட்டில் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முரளி(29) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் 5 பாட்டில் மது கைப்பற்றப்பட்டது. பூதப்பாண்டி பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சோபனதாஸ் என்ற மணி (48) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 6 பாட்டில் மதுபானம் கைப்பற்றப்பட்டது.

Related Stories: