சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக பெண் பிடிபட்டார்

சென்னை: சென்னை தியாகராயர் நகர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையனின் காதலி பிடிபட்டார். திருவள்ளூரை சேர்ந்த கார்த்தி என்பவர், உத்தம் நகைக்கடையில் கொள்ளையடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள கார்த்தியை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரமடைந்துள்ளனர். கார்த்தியின் இருப்பிடம் குறித்து காதலியிடம் தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னை தியாகராயர் நகரில் கடந்த 21ம் தேதி உத்தம் நகைக்கடையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: