சென்னை: அரசுப்பள்ளி மாணவர் நீட்டில் வென்றால் 10% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதே முன்னாள் நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரை; தமிழக அரசு அதனை 7.5%ஆக குறைத்தனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; கமிஷன் சதவிகிதத்தை உயர்த்தி கேட்டு கொள்ளையடிக்கும் எடுபிடிகள் - மாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம். நம் பிள்ளைகள் டாக்டர் ஆகக் கூடாது எனும் சதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் உள்ளார். யாராருடைய கால்-கையையோ பிடித்து லீஸுக்கு எடுக்கப்பட்ட அரசு; கலைந்திடுமோ? என்ற பயத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்று கையாலாகாத அடிமைகள் நழுவுகின்றனர்.