அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..!!

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் தீவிர மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தீவிர மூச்சுத் திணறலும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் சொல்ல தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  

அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 19ம் தேதி, முதல்வர் பழனிசாமி, மருத்துவமனை சென்று அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை முதலே தீவிராக மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருப்பது சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளது. எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் கருவி மூலம் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. இதனையடுத்து, அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: