தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..!!

சென்னை : சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சு திணறல் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சைப்பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் தீவிராக மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாகவும்   மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 13ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் சொல்ல தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.  உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் துரைக்கண்ணு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 19ம் தேதி, முதல்வர் பழனிசாமி, மருத்துவமனை சென்று அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை முதலே தீவிராக மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: