×

சென்னையில் ஆளுநர் மளிகை முன் த.பெ.தி.க.வினர் போராட்டம்!: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வலியுறுத்தல்!!

சென்னை: சென்னையில் ஆளுநர் மளிகை முன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வலியுறுத்தப்பட்டது. மசோதா அனுப்பப்பட்டு 5 வாரங்கள் கடந்த பின்பும் ஒப்புதல் தராத ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய த.பெ.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.


Tags : protest ,TPDK ,Governor ,Grocery ,government school students ,Chennai , Chennai, Governor's Grocery, TPDK protest
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...