சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய கலெக்டர் அலுவலகத்துக்கான அடிக்கல்லை காணொலி காட்சி மூலம் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்து வந்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி, செங்கல்பட்டை புதிய மாவட்டமாக தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.