இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முதன்முறையாக 7 லட்சத்திற்கு கீழ் இறங்கியது : குணமடைந்தோர் விகிதம் 90%-ஐ தொடுகிறது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.17 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 77 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 54,366 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  77,61,312 ஆக உயர்ந்தது.

* புதிதாக 690 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,306 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 73,979 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 69,48,497 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,95,509 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 89.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.51% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.96% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 14,42,722 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 10,01,13,085 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Related Stories: