×

வீட்டை உடைத்து 8 சவரன் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் நந்தவனம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகாகாந்தி (41). இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு மணவாள நகரில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்துள்ளார்.  அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ரேணுகாகாந்தி மணவாள நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : robbery ,house , 8 shaving robbery breaking into the house
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...