சென்னை: அதிமுக கூட்டணியில் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ராமதாஸ் ஆயிரம் கருத்துகளை சொல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பதால் கூட்டணியில் பிளவா என கேட்கிறீர்கள். கூட்டணியில் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு.