சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக் கழகத்துக்கும் பல்கலைக் கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.