பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்று கண்டெடுக்கப்பட்டது. இவை டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்று தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த முட்டைகள் குறித்து துபாயில் வாழும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் நிர்மல்ராஜா தெரிவிக்கையில், ‘குன்னம் பகுதியில் உள்ள படிமப்பாறைகள், 9-10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிரிடேஷியஸ் காலத்தில் கடலின் ஆழத்தில் 100 மீட்டர் இருக்கும் பொழுது உருவானவை. பல வருட ஆராய்ச்சியில் அங்கு டைனோசர் முட்டைகள் எங்கும் கிடைத்ததில்லை. நானும் பலமுறை அங்கு சென்றுள்ளேன்.