இஸ்லாமாபாத்: ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன் ‘கிரே’ எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இடம் பெறும் நாடுகளுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதி உதவி கிடைக்காது. பாகிஸ்தான் கடந்த 2018 ஜூனில் இருந்து ‘கிரே’ பட்டியலில் இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு எப்.ஏ.டி.எப். அமைப்பு 27 செயல்திட்டம் கொடுத்திருந்தது.