புதுச்சேரி: நாட்டிலேயே முதன் முறையாக புதுச்சேரி விமான நிலையம் முழுக்க முழுக்க சோலாரில் இயங்கிவருகிறது. புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டையில் அமைந்துள்ள விமான நிலையத்தில், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ.2.8 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அருகே 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி நிலையம் மிக உயர்ந்த பாலி கிரிஸ்டலின் சோலார் பி.வி பேனல்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2000 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் புதுச்சேரி விமான நிலையம் முழுக்க முழுக்க சோலாரில் இயங்கி வருகிறது.