ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் 144 தடை அமலில் இருப்பதால் கூட்டமாக வரக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி 113 ஜெயந்தி விழா மற்றும் 58 குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது.