டெல்லி: இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். ஒரு தகவலை மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பகிர்ந்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன்படி. இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் இருந்தப்படி நாட்டு மக்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என்று நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.