ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகப்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்புப் படையை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வந்தனர்.