சென்னை: நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மழையில் நெல் முட்டைகள் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதை அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை 32 லட்சத்து 41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 60 லட்சம் முட்டைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த நிலையில், தினமும் 5 லட்சம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது
மேலும், ஈரப்பதமாக உள்ள நெல் முட்டைகளை உடனே அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரீஃப் பருவத்தில் 32 லட்சத்து 41,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்டவுடன் 24 மணி நேரத்தில் ரூ.6,130 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. மேலும், இந்த குறுவை காலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் முட்டைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்துள்ளது.மேலும், தமிழகத்தில் மழையால் நனைந்த நெல்மூட்டைகள் ஈரப்பதாக இருந்தாலும் அரவைக்கு அனுப்பப்படுகிறது. நாள்தோறும் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் விளைச்சல் அதிகளவில் இருப்பதால் நெல்மூட்டைகள் தேங்கி உள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து, அவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருக்கக்கூடாது என்று உத்தரவு உள்ளது. ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.