செல்போன்கள் திருட்டு

ஆவடி: ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கூடுதலாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுண்டி(25) தலைமையில் 6 பேர் தங்கி இருந்து கட்டிட பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுண்டி உட்பட 6 தொழிலாளர்களும் செல்போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு உள்ளே தூங்கினர். பின்னர், நேற்று காலை அவர்கள் எழுந்து பார்த்தபோது அனைவரது செல்போன்களும் திருடுபோயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் முத்தாப்புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: