மீனம்பாக்கம்: துபாயில் இருந்து மீட்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த 97 இந்தியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த நைனார் முகமது (38), மதுரையை சேர்ந்த அப்துல்காதர் ஜெய்லானி (34) ஆகிய 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.