கிச்சன் டிப்ஸ்...

* மில்க் கிரீமிலிருந்து வெண்ணெயை பிரித்து எடுத்த பிறகு எஞ்சியிருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு பாலை சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான பனீர் கிடைக்கும்.

* பச்சை பட்டாணிகளை வேக வைக்கும்போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

* தேங்காய்பால் எடுத்து உணவு தயாரிக்கும்போது பிழிந்து வைத்த தேங்காய்பால் திரிந்து போகாமல் இருக்க சிறிதளவு தண்ணீரில் மக்காச்சோள மாவை கலக்கி அதில் ஊற்றி வையுங்கள்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* கோதுமையுடன் சமஅளவு அரிசி, கேழ்வரகு சேர்த்து அரைத்து அடை செய்தாலும், களி செய்தாலும் சுவையாக இருக்கும்.

* கற்பூரவல்லி இலைகளை பருப்புடன் சேர்த்து கடைந்து சாம்பார் செய்தாலும் சுவையாக இருக்கும்.

- சு.கண்ணகி, மிட்டூர்.

* பெருங்காயம் கட்டியாகி விட்டதா...? அதில் இரண்டு பச்சைமிளகாயை போட்டு வையுங்கள். இளகிவிடும்.

* மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

* மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். சுவையும் நன்றாக இருக்கும்.

* இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் வாடாமல், வதங்காமல் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

- க.நாகமுத்து, திண்டுக்கல்.

* லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது. நாற்றம் அடிக்காது.

- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* பனீரைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தபிறகு பயன்படுத்த எடுக்கும்போது பனீர் மிகவும் கெட்டியாக இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு ‘கப்’பில் தண்ணீர் எடுத்து அதில் பனீரை வெட்டாமல் முழுதாகப் போட்டு 5 நிமிடம் சென்றதும் எடுத்து பயன்படுத்தினால் பனீர் மிருதுவாக இருக்கும்.

- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த் தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப் பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள். ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

* தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அடுப்பில் இருந்து சாஸை இறக்கிய பின்பு தான் உப்பு சேர்க்க வேண்டும்.

* இன்ஸ்டன்ட் குலோப்ஜாமூன் மாவு வாங்கி தயாரிக்கும்போது மாவில் சிறிதளவு வெண்ணெய் சேருங்கள். குலோப்ஜாமூன் அதிக மென்மையாக இருக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: