புதுடெல்லி: கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் 22ம் ேததியில் இருந்து பயணிகள் ரயில்களை ரயில்வே இயக்கவில்லை. கடந்த மே, ஜூன் மாதங்களிலும் கடந்த 12ம் தேதியும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வி.கே.யாதவ் நேற்று கூறுகையில், ‘மண்டல பொது மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, கொரோனா பரவல் நிலை குறித்து, உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் அறிக்கை பெற்ற பிறகு, விடுமுறைக்கால ரயில்கள் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும். தற்போது, கூடுதலாக 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.