ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதே போல விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.