பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி தனியார் பள்ளி அருகில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளான தட்டாம்பாறை, முருக்கம்பாடி, சாமியார்மலை, மழவன்சேரம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இரவு, பகல் நேரங்களில் அருகே உள்ள தேயிலைத்தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்வது, குடியிருப்புகளை சேதம் செய்வது தொடர்ந்து தொடர்கதையாக உள்ளது.