×

அய்யன்கொல்லி தனியார் பள்ளி அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி

பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி தனியார் பள்ளி அருகில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளான தட்டாம்பாறை, முருக்கம்பாடி, சாமியார்மலை, மழவன்சேரம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இரவு, பகல் நேரங்களில் அருகே உள்ள தேயிலைத்தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்வது, குடியிருப்புகளை சேதம் செய்வது தொடர்ந்து தொடர்கதையாக உள்ளது.

நேற்று அய்யன்கொல்லி தனியார் பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய காட்டு யானைகள் தேயிலைத்தோட்டங்களில் நுழைந்தும் நெடுஞ்சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் தினந்தோறும் யானைகளை கண்காணித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : private school ,Ayyankolli , Wild elephants
× RELATED பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார்...