×

இன்று களைகட்டும் டாஸ்மார்க் விற்பனை: நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

சென்னை: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இவரது பிறந்த நாளை, வன்முறையற்ற தினமாக கொண்டாடும் விதமாக, காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட  ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு, மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து குடிமகன்கள் இன்றே தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைக்க முயல்வார்கள் என்பதால், டாஸ்மாக்கின் வருமானம் இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Weed Tasmac ,liquor stores ,Tasmac ,Tamil Nadu , Tamil Nadu, Tasmac, stores, order to close
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்