×

கனமழை காரணமாக தற்காலிக பாலம் துண்டிப்பு 20 கிராமமக்கள் கடும் அவதி

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவளூர் வழியாக விருத்தாசலம்-பெண்ணாடம் நெடுஞ்சாலை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தீவளூர், சாத்துக்குடல், தாழநல்லூர், கோனூர், இளமங்கலம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெண்ணாடம் மற்றும் விருத்தாசலத்திற்கு தங்களது அன்றாட தேவைகளுக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் தீவளூருக்கும், சாத்துக்குடலுக்கும் இடையே பல வருடத்திற்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் இருந்து வந்தது. அது இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தற்போது அதனை அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது.

இதற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அந்த பாலத்தின் வழியாக வந்த மழைநீர் தற்காலிக பாலத்தை அடித்து சென்று விட்டது. இதனால் போக்குவரத்திற்கு வழியின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags : Heavy rain, Vriddhachalam, temporary bridge
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...