×

நர்சரி பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: இன்று குலுக்கல்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற நாள்நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரையிலான நாட்களில் இணைய வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பெற்றோர்கள் அக்டோபர் 1ம் தேதியன்று தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் குலுக்கல் நடைபெற உள்ளது. அதன்படி, தாங்கள் விண்ணப்பித்த பள்ளிக்கு 1ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வந்து குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : nursery schools , Student enrollment in 25% reservation in nursery schools: Shake today
× RELATED எல்கேஜி, யுகேஜி, கேரளாவை ஒட்டியுள்ள...