செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அங்கு வந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரயில்வே ஊழியர்கள் சென்னை செல்வதற்கு வசதியாக செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் தமிழக அரசு அனுமதியுடன் சென்னை தலைமை செயலகம், வணிக வரித்துறை, கல்வித் துறை உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காலை வழக்கம்போல் சிறப்பு ரயிலில் செல்வதற்காக, 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். அப்போது, அங்கிருந்த ரயில்வே போலீசார், அவர்களை நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர்.