செய்யூர்: செய்யூர் அடுத்த பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையினர் சார்பில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து மாத விழா நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் தலைமை தாங்கினார். பகுதி சுகாதார செவிலியர் சுனதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் கலந்து கொண்டார். இதில் பவுஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.