ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.எஸ்.விஜயகுமார் (50). இவர், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல், கட்சி வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். கும்மிடிப்பூண்டி பகுதியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் விஜயகுமார் எம்எல்ஏவும், அவ்வப்போது இதுவரை 8 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.