கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார்

ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.எஸ்.விஜயகுமார் (50). இவர், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன்  வசித்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல், கட்சி வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். கும்மிடிப்பூண்டி பகுதியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் விஜயகுமார் எம்எல்ஏவும், அவ்வப்போது இதுவரை 8 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.  

சட்டசபை கூட்டத்தொடருக்கு சென்றபோதும் கொரோனா தொற்று இல்லை. இந்நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பு 9வது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில், கடந்த 24ம் தேதி விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான சளித்தொல்லை மட்டுமே இருந்ததால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், விஜயகுமார் எம்எல்ஏ கொரோனாவில் இருந்து குணமாகி நேற்று வீடு திரும்பினார். அவரது மகள் ஆரத்தி எடுத்து, அவரை வரவேற்றார்.

Related Stories: