திருவள்ளூர்: பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் ஏரியில் கரையோரங்களில் பனை விதை நடும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பனை விதை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், “குடிமராமத்து பணி என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீர் செய்து நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டாக குடி மராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணி செய்து நீர்மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.