பாபர் மசூதி தீர்ப்பு: கமல் ஆதங்கம்

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண்போகக்கூடாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: