×

சொல்லிட்டாங்க...

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., மத்திய பாஜ அரசின் கூண்டுக்கிளியாக மாறிவிட்டது வெட்கக்கேடானது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* தற்போது, அதிமுக இரட்டை தலைமையோடு செயல்படுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை. - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

* அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலக அளவில் அதற்குரிய பெயரும், தரமும் குறைந்துவிடும். அதை இரண்டாக பிரிக்கக் கூடாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Told...
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு