வாலிபர் கொலையில் அதிமுக பிரமுகரை விசாரிக்க அனுமதி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லால் மகன் செல்வன் (32), கடந்த 17ம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னையில் சரண் அடைந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் உட்பட கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களிடம் 6 நாள் விசாரிக்க மாஜிஸ்திரேட் நேற்று அனுமதியளித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories: