தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் நேற்று 1295 பேருக்கும், தமிழகத்தில் 5659 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 86,928 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,659 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1295 பேர், செங்கல்பட்டில் 335 பேர், திருவள்ளூரில் 275 பேர், காஞ்சிபுரத்தில் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 729 ஆண்கள், 2 லட்சத்து 36 ஆயிரத்து 842 பேர் பெண்கள், 31 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 263 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதில் சென்னையில் 16 பேர், கோவையில் 11 பேர், திருப்பூரில் 6 பேர், சேலத்தில் 5 பேர், கடலூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 4 பேர், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா 3 பேர் என பல்வேறு மாவட்டங்களில் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 5 பேர் கொரோனாவால் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். 62 பேர் பேர் கொரோனா மற்றும் இணை நோய்களுடன் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: