திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி மாரியப்பன் வரவேற்றார். நீதிபதி முத்துசாரதா பேசுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் 68 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது’ என பேசினார்.