முதல்வர், துணை முதல்வர் இடையே போரும் இல்லை, வாரும் இல்லை :அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

நாகை, : முதல்வர், துணை முதல்வர் இடையே போரும் இல்லை, வாரும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நாகையில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக அழியாது, யாராலும் அழிக்க முடியாது. இது 32 ஆண்டு கால கட்சி. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கட்சி. இதில் இருந்தே அதிமுகவின் பலத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் போரும் இல்லை. வாரும் இல்லை. துணை முதல்வரை மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்று தான். மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொடர்ந்து நிருபர்கள், சசிகலா வெளியே வந்தபின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கடந்த காலத்தை பற்றி பேச வேண்டாம். நிகழ்காலத்தை பற்றி பேசுவோம் என்றார்.

Related Stories: