மன்னார்குடி: மன்னார்குடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக தற்காலிக பெண் பணியாளர் தனது மகனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆனந்தியை சஸ்பெண்ட் செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனமுடைந்த ஆனந்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.