புதுடெல்லி: ‘தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்பதால், தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது,’ என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதோடு, பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உளள ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று ஆலோசனை நடத்தினார்.
திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- இடைத் தேர்தல்களில்
- தொகுதிகளில்
- குடியாதம் சட்டமன்றம்
- திருவொற்றியூர்
- அறிவிப்பு
- பிரதான தேர்தல் ஆணையம்