சென்னை: செங்கல்பட்டில் சிறைத்துறை காவலர் கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை கோர்ட்டில் 5 வாலிபர்கள் நேற்று சரணடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த பழையசீவரம் பெரிய காலனியை சேர்ந்தவர் இன்பரசு(29). சென்னை புழல் சிறையில் சிறைத்துறை காவலராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் பைக்கில் பழையசீவரம் ரயில்வே கிராஸ் அருகே வந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே இன்பரசு பலியானார்.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் குடும்ப பகை காரணமாக இன்பரசுவின் நெருங்கிய உறவினர் வரதராஜன் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.