×

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று ஒரே நாளில் 1,277 பேருக்கு கொரோனா.. சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,546  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,91,943-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,  

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,36,209 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,501 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,453-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,277 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 72,67,122 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,997 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 186 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,57,253 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,395 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,34,659 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  2,151 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

* ஜார்க்கண்ட்: 1
* ஆந்திரப்பிரதேசம்: 1
* புதுச்சேரி: 1
* கர்நாடகா: 1

Tags : Corona ,Tamil Nadu ,Chennai ,Health Department , In Tamil Nadu, Corona, Vulnerability, Health Department Report
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...