வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்த பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் சேலம் நகரத்தில் உள்ள வீட்டிலே திங்களன்று மதியம் 12:30 மணிக்கு ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் பணயக்கைதிகளாக பலரை பிடித்து வைத்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயிற்சி பெற்ற பேச்சுவார்த்தையாளரை வைத்து சந்தேக நபருடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதனால் கடுப்பான மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.