தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் : திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நம்பிக்கை

திருவாரூர் :தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று திருவாரூர் வந்த டி.ஆர்.பாலு அங்கு, காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக, பாமக கட்சிகள் சேருமா என்று கேட்கிறிர்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை முடிவு செய்வார். இருப்பினும் தற்போதுள்ள கட்சிகளை விட கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் வேளாண் சார்ந்த திட்டங்களை அதிமுக அரசு ஆதரிப்பதன் காரணமாக வரும் தேர்தலில் விவசாயிகள், பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர், சேப்பாக்கம் தொகுதியி்ல் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவார். தற்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி நிலை உள்ளதால் சென்னையிலிருந்து நாகை, திருவாரூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ரயில்கள்  இயக்கப்படவில்லை.  விரைவில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: