திருவாரூர் :தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று திருவாரூர் வந்த டி.ஆர்.பாலு அங்கு, காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக, பாமக கட்சிகள் சேருமா என்று கேட்கிறிர்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை முடிவு செய்வார். இருப்பினும் தற்போதுள்ள கட்சிகளை விட கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.